/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தங்கப் பதக்கம் வென்ற கான்ஸ்டபிளுக்கு பாராட்டு
/
தங்கப் பதக்கம் வென்ற கான்ஸ்டபிளுக்கு பாராட்டு
ADDED : மார் 18, 2025 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கமாண்டோ பயிற்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆயுதப்படை போலீஸ்காரரை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.
கடலூர் மாவட்ட காவல் ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரர் வெங்கடகிருஷ்ணராவ், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கமாண்டோ பயிற்சி பள்ளியில் 8 வாரம் கமாண்டோ சிறப்பு பயிற்சியில் பங்கேற்றார்.
வெங்கடகிருஷ்ணாராவ் கமாண்டோ பயிற்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற போலீஸ் வெங்கட கிருஷ்ணாராவை கடலூர் எஸ்.பி., ஜெயக்குமார், நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.