/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்கு வித்திடும் அரசுப்பள்ளி
/
கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்கு வித்திடும் அரசுப்பள்ளி
கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்கு வித்திடும் அரசுப்பள்ளி
கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்கு வித்திடும் அரசுப்பள்ளி
ADDED : நவ 23, 2025 04:52 AM

கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி, அவர்களின் வளர்ச்சிக்கு, உறுதுணையாக அரசுப்பள்ளி விளங்குகிறது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தீவளூரில் கடந்த, 1986ல் அரசு உயர்நிலைப்பள்ளி கொண்டு வரப்பட்டது.
கடந்த 2011ல் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு தலைமை ஆசிரியர் உட்பட, 2 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 5 பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் 2 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 1 பட்டதாரி ஆசிரியர், பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, கணினி அறிவியல் ஆசிரியர்கள் உட்பட, 13 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு சுற்றியுள்ள தீவளூர், தாழநல்லுார், சாத்துக்கூடல், உச்சிமேடு, வெண்கரும்பூர், சத்தியவாடி, நந்தப்பாடி, ஆலிச்சிக்குடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 181 மாணவர்கள், 140 மாணவியர்கள் என, 321 பேர் படிக்கின்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் கடந்த, 2022 கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும், வெளிநாடுகளிலும் உயர் பதவியில் உள்ளனர்.

