sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாரண சாரணியர்களுக்கான கவர்னர் விருது தேர்வு முகாம்

/

சாரண சாரணியர்களுக்கான கவர்னர் விருது தேர்வு முகாம்

சாரண சாரணியர்களுக்கான கவர்னர் விருது தேர்வு முகாம்

சாரண சாரணியர்களுக்கான கவர்னர் விருது தேர்வு முகாம்


ADDED : நவ 04, 2025 01:30 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில், சாரண சாரணியர்களுக்கான கவர்னர் விருது தேர்வு முகாம் நடந்தது.

முகாமில் சிதம்பரம் மற்றும் வடலுார் சாரண மாவட்டத்தின் சார்பில் 32 பள்ளிகளை சார்ந்த 137 சாரணர்களும் , 69 சாரணியர்களும், 35 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 3 நாட்கள் நடந்த முகாமில் சாரண உறுதிமொழி, சட்டம், குறிக்கோள், பாடல்கள், முதலுதவி, மதிப்பீடு, நிலப்படக்கலை, முடிச்சுடுகள், கூடாரங்கள் அமைத்தல் போன்ற பாடத்திட்டத்தின் செயல்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் நடந்தன.

தொடர்ந்து நடந்த முகாம் நிறைவு விழாவில், வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் சிதம்பரம் மாவட்ட சாரணத் தலைவர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ரூபியால் ராணி, முதல்வர் நரேந்திரன், வடலுார் மாவட்ட சாரண ஆணையர் முருகையன், சாரணிய ஆணையர் சுகிர்தா தாமஸ் முன்னிலை வகித்தனர்.

சிதம்பரம் சாரண செயலர் பாக்கியராஜ் வரவேற்றார். மாநிலத் தலைமையகத்தால் நியமிக்கப்பட்ட முதன்மைத் தேர்வாளர்கள் வேலாயுதம், வீரப்பா, உஷாராணி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று கவர்னர் விருதுகளுக்கான சாரண சாரணியர்களை தேர்வு செய்தனர்.

முகாம் ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அன்புவேல், சுதாகர், நடராஜன், மதன்ராஜ், சோமசுந்தரம், சிவகுமார், வெங்கடேசன், ஜெயந்தி, கவிதா, கோமதி ஆகியோர் செய்திருந்தனர். வடலுார் மாவட்ட சாரண செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us