sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறைகேட்பு கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்

/

குறைகேட்பு கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்

குறைகேட்பு கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்

குறைகேட்பு கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஏப் 29, 2025 09:35 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 09:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ.2.79 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். டி.ஆர்.ஓ ராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல மாவட்ட அலுவலர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் ராணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தங்கமணி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் தொகை, சான்றிதழ் கோருதல் உள்ளிட்ட 823 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கல் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரியம் சார்பில் உறுப்பினராக உள்ள 21 பணி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியத் தொகை ரூ.1,200 வீதம் மொத்தம் 2,79,300 ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.






      Dinamalar
      Follow us