நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலை வருவாய் அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து 720 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.