ADDED : அக் 05, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக் கடைக்காரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த வல்லம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிக்கடையை சோதனை செய்தனர்.
பெட்டிக்கடையில், 5 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. குட்கா பாக்கெட்டுகுளை பறி முதல் செய்த போலீசார் ,கடைக்காரர் சிவசண்முகத்தை, 41; போலீசார் கைது செய்தனர்.