நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ஜங்ஷன் சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மாணிக்க வாசகர் நகரைச் சேர்ந்த மதியழகன், 62; என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த, மதியழகனை கைது செய்தனர்.