ADDED : நவ 22, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: குட்கா பதுக்கி விற்ற மளிகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
ஆவினங்குடி சப் இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா தலைமையிலான போலீசார் நேற்று பகல் 11:00 மணியளவில் ரோந்து சென்றனர். கொட்டாரம், அண்ணாநகரில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது, அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 147 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் சந்தானம், 52, என்பவரை போலீசார் கைது செய்தனர்.