ADDED : ஜன 29, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : வடலுார் சப்இன்ஸ்பக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் நேற்று காலை ஆபத்தாரணபுரம் பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வேந்தன்,64, என்பவர் பெட்டிக்கடையில்
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதை கண்டறிந்தனர். அவரிடமிருந்து 5ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வடலுார் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.