/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில்கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு
/
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில்கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில்கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில்கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஆக 17, 2025 11:09 PM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து 2506 கன அடியாக அதிகரித்தது.
இந்த அணை நீர்ப் பிடிப்பில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 17.2 மி.மீ., தேக்கடியில் 16.8 மி.மீ.. மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2506 கன அடியாக அதிகரித்தது.
நீர்மட்டம் சற்று உயர்ந்து 133.55 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்பட்டு உள்ளது. நீர் இருப்பு 5527 மில்லியன் கன அடியாகும். நீர்ப்பிடிப்பில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.
தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 100 மெகாவாட்டாக இருந்தது.