sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் இடத்தில் சாலை போட முயற்சி கிராம மக்களுடன் இந்து முன்னணி புகார்

/

கோவில் இடத்தில் சாலை போட முயற்சி கிராம மக்களுடன் இந்து முன்னணி புகார்

கோவில் இடத்தில் சாலை போட முயற்சி கிராம மக்களுடன் இந்து முன்னணி புகார்

கோவில் இடத்தில் சாலை போட முயற்சி கிராம மக்களுடன் இந்து முன்னணி புகார்


ADDED : அக் 05, 2024 04:15 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : கோவில் இடத்தில் பாதை கேட்டு ஆளுங்கட்சி பிரமுகர்கள் உதவியுடன் மிரட்டுவதாக கிராம மக்கள் புகார் மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த முடப்புளி கிராம மக்கள், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தாசில்தார் உதயகுமாரிடம் மனு கொடுத்தனர். அதில்,பெரியாண்டவர் கோவில் சர்வே எண்.21ல் அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள நிலங்களின் உரிமையாளர்கள் கோவில் வழியாக வந்து செல்கின்றனர். தனிநபர் ஒருவர் அவர் இடத்திற்கு செல்ல கோவில் நிலத்தில் ரோடு போட வேண்டும் தகராறு செய்து வருகின்றார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் கோவில் இடத்தில் தனி நபருக்கு வழி தர முடியாது என தீர்ப்பும் பெற்றுள்ளோம்.

ஆனால், சம்பந்தப்பட்ட தனிநபர் அரசியல் பிரமுகர்கள் மூலமாக மிரட்டி வருகின்றார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறுகையில், '150 ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோவிலில் பாதை கேட்டு தனிநபர் அரசியல் மிரமுகர்களை வைத்த மிரட்டுகின்றனர்.

முதற்கட்டமாக தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளோம். மிரட்டல் தொடர்ந்தால் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். தர்மகர்த்தா அருள்மணி உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us