ADDED : நவ 01, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி இந்துமக்கள் கட்சி சார்பில் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பண்ருட்டி அடுத்த அவியனுார் கிராமத்தில் புறம் போக்கு இடத்தில் வசிககும் 20 குடும்பத்திற்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவா தலைமையில் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், ஆன்மிக பேரவை நாகராஜ், நகர தலைவர் சங்கர் உடனிருந்தனர்.

