/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணாபுரத்தில் மனுநீதி நாள் முகாம்
/
கிருஷ்ணாபுரத்தில் மனுநீதி நாள் முகாம்
ADDED : பிப் 17, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி ஒன்றியம், கிருஷ்ணாபுரத்தில், வருவாய்த்துறை சார்பில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது.
தாசில்தார் தணபதி தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சசிகுமார், துணை தாசில்தார் ஆனந்தி முன்னிலை வகித்தனர்.
சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மிராணி, 12 பேருக்கு இலவச வீட்டு மனை உட்பட 34 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 427 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மேல் புவனகிரி ஒன்றிய அலுவலக கணக்காளர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.