ADDED : மே 04, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 37; இவரது மனைவி ஆனந்தவள்ளி, 25; குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். திருமணத்தின் போது, கொடுத்த சீர்வரியை திருப்பித் தருமாறு பிரகாஷிடம் ஆனந்தவள்ளி கூறியதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ், ஆனந்தவள்ளியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து பிரகாசை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.