/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐஸ்கிரீம் தயாரிப்பு மாணவிகளுக்கு பயிற்சி
/
ஐஸ்கிரீம் தயாரிப்பு மாணவிகளுக்கு பயிற்சி
ADDED : ஜன 30, 2026 07:02 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரசாயணமற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு குறித்து வேளாண் மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காமாண்டு மாணவிகள், விருத்தாசலத்தில் தங்கி, வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.
அதன்படி, வேளாண் மாணவிகள் சங்கவி, சரயு, மற்றொரு சங்கவி, ஸ்ரீநிதி, சுபாஷினி, சுஜா, ஸ்வேதா, வாகீஸ்வரி, வினிதா, ஹேமாவதி ஆகியோர் இயற்கை முறையில் ரசாயணம் இல்லாத ஐஸ்கிரீம் தயாரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி பெற்றனர்.
விவசாயி சிவக்குமார் சிறுதானியம், பலா, மா, அத்தி, சீத்தா, கொய்யா, சப்போட்டா, அன்னாசி, பனை ஆகியவற்றில் இருந்து ரசாயணம் இல்லாமல் ஐஸ்கிரீம் தயாரிப்பு முறைகள் குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளித்தார்.
மேலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு முறைகளால் வேளாண் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

