/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையம் திறப்பு
/
இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையம் திறப்பு
ADDED : அக் 12, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தில், தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையம் திறக்கப்பட்டது.
கீரப்பாளையம் வட்டார வேளாண் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, வேளாண் இணை இயக்குனர் கென்னடிஜெபக்குமார் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையத்தை திறந்து வைத்தார். வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண் அலுவலர் சிவப்பிரியன் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை குழு விவசாயிகள், உதவி வேளாண் அலுவலர்கள், ஆத்மா திட்ட பணியாளர்கள் பயிர் அறுவடை பரிசோதகர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.