நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் 655ம் ஆண்டு ஐப்பசி மாத திருமூல அவதார உற்சவம் நாளை (18ம் தேதி) துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது.
தினமும் காலை 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா, 11:00 மணிக்கு திருமஞ்சனம், கண்ணாடி அறைக்கு எழுந்தருளி திருப்பாவை சாற்றுமுறை, மாலை 4:00 மணிக்கு உபன்யாசம், 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 7:00 மணிக்கு வீதியுலா, 9:00 மணிக்கு திருவாய்மொழி சாற்றுமுறை நடக்கிறது.