/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏர்-ஹாரன் பயன்பாடு அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
/
ஏர்-ஹாரன் பயன்பாடு அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 29, 2024 06:05 AM
மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பம் பகுதியில் ஏர்-ஹாரன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மந்தாரக்குப்பம் பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள், பஸ்கள், வேன், கார், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர்-ஹாரன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ஒலி மாசு ஏற்படுதல், காது சம்பந்தபட்ட நோய்கள், மன அழுத்தம் உள்ளிட்டவைகளால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது வாகனங்களில் ஏர்-ஹாரன்களை பயன்படுத்தும் போது வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே ஏர்-ஹாரன் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்