ADDED : அக் 12, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் நாகராஜ், மாவட்டக்குழு சுந்தர்ராஜா, பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
துணை செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகக்குழு சுப்ரமணியன், குணசேகரன், பன்னீர்செல்வம், சிவக்குமார், லட்சுமி கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீதான அவமதிப்பு சம்பவத்தை கண்டித்து பேசினர்.