ADDED : செப் 24, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சர்வதேச கடலோர பகுதிகள் துாய்மைபடுத்தும் தினத்தையொட்டி, அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம் சார்பில், சிதம்பரம் அடுத்துள்ள சாமியார்பேட்டை கடற்கறையில துாய்மை பணிகள் நடந்தது.
உயராய்வு மைய புல முதல்வர்சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கி துாய்மை பணியை துவக்கி வைத்தார்.சாமியார்பேட்டை மீனவ கிராம நிர்வாக தலைவர் நாகலிங்கம், சிலம்பிமங்கலம் ஊராட்சி தலைவர் அமுதா ராஜேந்திரன், பிச்சாவரம் வனசரகர் இக்பால்,மீன்வளத்துறை ஆய்வாளர் விஜ்வந்த் பங்கேற்றனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஆனந்தன்,சிவக்குமார், தெய்வசிகாமணி, சரவணன், ஹான்சூஜி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ்,தங்கராஜ், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர்விஜயானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.