sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சமூக வலைதளத்தில் பேட்டி வைரல்: ரயில்வே கேட் கீப்பருக்கு நோட்டீஸ் 

/

சமூக வலைதளத்தில் பேட்டி வைரல்: ரயில்வே கேட் கீப்பருக்கு நோட்டீஸ் 

சமூக வலைதளத்தில் பேட்டி வைரல்: ரயில்வே கேட் கீப்பருக்கு நோட்டீஸ் 

சமூக வலைதளத்தில் பேட்டி வைரல்: ரயில்வே கேட் கீப்பருக்கு நோட்டீஸ் 


ADDED : ஜூலை 10, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவத்தை தொடர்ந்து புதிதாக போடப்பட்ட கேட் கீப்பருக்கு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பாசஞ்சர் ரயில், பள்ளி வேன் மீது மோதியதில் 3 மாணவர்கள் இறந்தனர். காயமடைந்த 10ம் வகுப்பு மாணவர் விஸ்வேஸ் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

ரயில் விபத்தில் தொடர்புடைய கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றவுடன் 'கிராம மக்கள், தனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. தன்னிச்சையாக எப்படி கருத்து கூறலாம் என விளக்கம் கேட்டு அவருக்கு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.






      Dinamalar
      Follow us