sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இரிடியம் மோசடி: வாலிபர் கைது

/

இரிடியம் மோசடி: வாலிபர் கைது

இரிடியம் மோசடி: வாலிபர் கைது

இரிடியம் மோசடி: வாலிபர் கைது


ADDED : நவ 06, 2025 05:42 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: இரிடியம் மோசடியில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த வாலிபரை, கடலுார் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த பெண் உள்ளிட்ட 20 பேர் கடந்த மாதம், கடலுார் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் புகார் அளித்தனர். அதில், 'விழுப்புரம் மாவட்டம், திருவாமூரை சேர்ந்த சதீஷ்குமார்,35, என்பவர் சில ஆண்டுகளுக்கு முன், அறிமுகம் ஆனார். அவர், இரிடியத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், 3 மாதத்தில் ஒரு கோடி ரூபாய் தரப்படும் என தெரிவித்தார்.

அதை நம்பி, மகளிர் சுயஉதவிக்குழு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி மொத்தம் 80 லட்ச ரூபாய் கொடுத்தோம். பணத்தை பெற்றுக்கொண்ட சதீஷ்குமார், கூறிய படி பணம் தரவில்லை, நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பித்தரவில்லை,' என புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

நேற்று சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் பணிபுரிந்து வந்த சதீஷ்குமாருக்கு இரிடியம் விற்பனை மோசடி கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி தருவதாக கூறி பணத்தை வசூல் செய்வதற்காக கடலுார், விழுப்புரம் மாவட்டத்திற்கு மோசடி கும்பலின் ஏஜண்டாக செயல்பட்டு வந்தது தெரிந்தது.

சதீஷ்குமாருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

60க்கும் மேற்பட்டோர் கைது

மோசடி கும்பல், ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாக பயன்படுத்தி தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்டதால், அதை தடுக்க ரிசர்வ் வங்கி சார்பில் தமிழக டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள மோசடி நெட் ஒர்க்கிலுள்ள அனைவரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முதற்கட்டமாக கடந்த, செப்.,12ம் தேதி 30 பேரை கைது செய்தனர். கடந்த, அக்.,23, 24ம் தேதிகளில் 15 மாவட்டங்களில் தேடுதல் வேட்டையை மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி.,போலீசார் 32 பேரை கைது செய்தனர். கடலுார் மாவட்டத்தில் இதுவரை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று சதீஷ்குமாரை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us