ADDED : அக் 23, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சிதம்பரத்தில் தில்லை கம்பன் கழக துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, செந்தில்ஞானவேல் சிட்பண்ட் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் நடராஜ விலாஸ் ஜூவல்லரி உரிமையாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். கம்பன் பெருமைகளைப் பற்றியும், அவரது கவிநயம் பற்றியும் கோகுலாச்சாரி, ராமவீரப்பன் வாழ்த்திப் பேசினார். பொதுமக்கள், வணிகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை பிரகாஷ் செய்திருந்தார். தில்லை கம்பன் கழக செயலாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.