ADDED : பிப் 09, 2025 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய மாவட்ட காங்., சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாநகர தலைவர் வேலுசாமி, நிர்வாகிகள் ரவிக்குமார், குமார், வட்டார தலைவர் ராமகிருஷ்ணன், ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் கிஷோர்குமார், காமராஜ், செங்கேணி, சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்களை காப்பாற்ற தவறிய மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.