ADDED : ஆக 08, 2025 11:49 PM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, அமைதி ஊர்வலம் நடந்தது.
நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், பொதுக்குழு அரங்கபாலகிருஷ்ணன், குரு சரஸ்வதி, துணை செயலாளர்கள் ராமு, நம்பிராஜன், சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், பழனிசாமி, வழக்கறிஞர் சரவணன், பொருளாளர் மணிகண்டன், நகர அவைத் தலைவர் செங்குட்டுவன், இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ் முன்னிலை வகித்தனர்.
பஸ் ஸ்டாண்டில் இருந்து பாலக்கரை, கடைவீதி வரை அமைதி ஊர்வலம் நடந்தது. கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார், துணை அமைப்பாளர் செல்வமணி, கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், தளபதி, உஷா பாலு, மணிவண்ணன், தீபா மாரிமுத்து, ராஜாத்தி சரவணன், வசந்தி புருஷோத்தமன், விவசாய தொழிலாளரணி அறிவுடைநம்பி, வர்த்தக அணி வெ ங்கடேசன், காந்தி, சோழன் சம்சுதீன், நடராஜன் பங்கேற்றனர்.