/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுற்றுலா வந்த கேரள வாலிபர் விடுதியில் தற்கொலை
/
சுற்றுலா வந்த கேரள வாலிபர் விடுதியில் தற்கொலை
ADDED : செப் 19, 2025 03:32 AM
கோட்டக்குப்பம்: தனியார் விடுதி அறையில் கேரள மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பரக்கண்டதி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் சரத், 25; புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவர், நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பம் எம்.ஜி.ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை வரை சரத் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது, சரத் வேட்டியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.