/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கேலோ இந்தியா இளையோர் போட்டி: கடலுார் மாணவி தேர்வு
/
கேலோ இந்தியா இளையோர் போட்டி: கடலுார் மாணவி தேர்வு
ADDED : மே 08, 2025 01:40 AM

கடலுார்: கடலுாரைச் சேர்ந்த மாணவி, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்போட்டியில் தமிழக வாலிபால் அணியில் இடம்பிடித்துள்ளார்.
கடலுார் செம்மண்டலத்தைச் சேர்ந்தவர் சிவபாலகுமார் மகள் கிரேஷ்மா,16. புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.
இவர் கடந்த ஒரு ஆண்டாக மெட்ரோ பிரண்ட்ஸ் வாலிபால் கிளப்பில் பயிற்சி பெற்று மாநில அளவிலான போட்டிகளில பங்கேற்றார்.
தற்போது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்போட்டிகளில் தமிழக வாலிபால் அணியில் இடம்பிடித்துள்ளார். பீகாரில் நடக்கும் போட்டியில் தமிழக அணி சார்பில் மாணவி கிரேஷ்மா பங்குபெற்று விளையாடி வரும் நிலையில், தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மாணவியின் பயிற்சியாளர் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் மாணவியை பாராட்டி வருகின்றனர்.