ADDED : மார் 15, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அர்-ரஹ்மத் மெட்ரிக் பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் ஆரிப் தலைமை தாங்கினார்.
தாளாளர் முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஈவா ஜாஸ்மின் வரவேற்றார்.
எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டம் வழங்கப் பட்டது.
நெய்வேலி மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசல் தலைவர் மதார்ஷா சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. பள்ளி வாசல் பொருளாளர் அப்துல்சமது, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

