ADDED : மார் 13, 2026 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராதாகிருஷ்ணன், 25; இவர், நேற்று முன்தினம் வீட்டு எதிரில் பேசிக்கொண்டிருந்தார் .
அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் நீலகண்டன்,25; என்பவர், எனது தாயிடம் கொடுத்த பணத்தை ஏன் திருப்பி கேட்கிறாய் என கேட்டு, ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தினார்.
புகாரின் பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து நீலகண்டனை கைது செய்தனர்.

