sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கீழே கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

/

கீழே கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

கீழே கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

கீழே கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு


ADDED : நவ 03, 2025 05:48 AM

Google News

ADDED : நவ 03, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: கீழே கிடந்த ஆறரை சவரன் நகையை, போலீசில் ஒப்படைத்தவரை அனைவரும் பாராட்டினர்.

பரங்கிப்பேட்டை அடுத்த சில்லாங்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதாசிவம், 35; பூ வியாபாரி. இவர் நேற்று முன்தினம் வங்கியில் அடமானம் வைத்திருந்த ஆறரை சவரன் நகையை மீட்டு ஒரு பையில் வைத்துக்கொண்டு சைக்கிளில் பரங்கிப்பேட்டை பகுதியில் பூ விற்பனை செய்தார்.

வியாபாரம் முடிந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது, நகை பையை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்தவர், வியாபாரம் செய்த பகுதிகளுக்கு சென்று நகையை தேடினார்.

இந்நிலையில் நேற்று கோட்டாத்தாங்கரை தெருவை சேர்ந்த சம்சா கடை உரிமையாளர் ஜக்கிரியா, கடைக்கு பைக்கில் செல்லும்போது, டில்லி காகிப் தெருவில் பை ஒன்று கீழே கிடப்பதை கண்டார். அதை எடுத்து பார்த்தப்போது, பையில், நகை இருந்தது தெரிந்தது.

அந்த நகை பையை அவர் பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில்ஒப்படைத்தார். அவரின் நேர்மையை, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாராட்டினார்.

சதாசிவத்திடம் விசாரணை செய்து அவரது ஆறரை சவரன் நகையை போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us