/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 11, 2024 04:26 AM

சிதம்பரம் : தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
இந்திய பள்ளிகளுக்கான, எஸ்.ஜி.எப்.ஐ., சார்பில் நடந்த, வூ ஷு தெரிவு போட்டியில், தமிழக அளவில் நடந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீனஸ் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர் சோமேஷ்வர், தமிழக அணி சார்பில், காஷ்மீரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார். 9ம் வகுப்பு மாணவர் மோகேஷ் திருச்சியில் நடைபெறவுள்ள, தமிழக அளவிலான பேஸ் பால் போட்டியில் வெற்றி பெற்று, தமிழக அணிக்கு தேர்வாகியுள்ளார்.
சத்தீஸ்கரில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், 11 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 4ம் வகுப்பு மாணவி பிரகதா முதலிடம், 17 வயது பிரிவில் மாணவி ஐஸ்வர்யா முதலிடம், மாணவர் ஈஷ்வா மூன்றாமிடம் பிடித்தனர். குண்டு எரிதலில் 19 வயதிற்குட்பட பிரிவில் சிவகோகுல் முதலிடமும், 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் சுவேத்தாம்பரி இரண்டாமிடம், 17 வயதிற்குட்பட்ட பிரிவில், 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் குருபிரசந்த் இரண்டாம் இடம் பெற்றனர்.
அவர்களை பள்ளி தாளாளர் வீனஸ் குமார், துணை தாளாளர் ரூபியால் ராணி பாராட்டினர். பள்ளி முதல்வர் நரேந்திரன், உடற்கல்வி இயக்குனர் பிரபாகர், உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, ரஞ்சித் உடன் இருந்தனர்.