ADDED : ஜன 22, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டுவிழா பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் மெயின்ரோடு வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 11 ஆண்டுகள் முடிந்து 12 ஆம் ஆண்டு துவங்குகிறது. இதை முன்னிட்டு கும்பாபிஷேக ஆண்டு விழா பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமமும்,108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகமும் நடத்தி விநாயகருக்கு சங்காபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.பூஜைகளை முருகானந்தம்,முருகன்,ஹரிபிரபு குருக்கள் செய்தனர்.பரம்பரை தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.