/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பநத்தம் புறவழிச்சாலை 'பஞ்சர்'
/
குப்பநத்தம் புறவழிச்சாலை 'பஞ்சர்'
ADDED : பிப் 20, 2024 02:57 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் குப்பநத்தம் புதிய புறவழிச்சாலை பள்ளம் படுகுழியாக மாறியதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பாதித்து வருகின்றனர்.
விருத்தாசலம் நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், 2011ம் ஆண்டில் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி வரை புறவழிச்சாலை போடப்பட்டது.
இவ்வழியாக திருச்சி, கடலுார், சேலம் மார்க்க நெடுந்துார மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன.
அதுபோல், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டம் மூலம் உளுந்துார்பேட்டை மார்க்கத்தில் இருந்து ஜங்ஷன் ரோடு, செராமிக் தொழிற்பேட்டை, ஆலடி இணைப்பு சாலை, அரசு பழத்தோட்டம், குப்பநத்தம் சாலை வழியாக கடலுார் மார்க்கமாக புதிய புறவழிச்சாலை போடப்பட்டது.
இதனால், நகரில் வாகன நெரிசல் குறைந்து, விபத்துகளும் தவிர்க்கப்பட்டது. நாளடைவில் குப்பநத்தம் புதிய புறவழிச்சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதில், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பேட்ஜ் ஒர்க் செய்யப்படுகிறது.
மற்ற பகுதிகள் கேட்பாரற்று கிடப்பதால் வாகனங்கள் செல்லும்போது புழுதிப்புயல் வீசுகிறது. மேலும், வாகனங்கள் டயர் பஞ்சராவது, ஆக்சல் உடைவது போன்ற செலவினங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், அப்பகுதியில் வசிப்போர் மிகுந்த சிரமமடைகின்றனர்.

