/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோர்டியா மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை
/
லட்சுமி சோர்டியா மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை
லட்சுமி சோர்டியா மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை
லட்சுமி சோர்டியா மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை
ADDED : டிச 14, 2024 05:09 AM

கடலுார்: தேசிய அளவிலான கராத்தே போட்டியில், கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவர்கள் சாதனைபடைத்தனர்.
காரைக்கால் அரசு உள் விளையாட்டு அரங்கில், தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதில், கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவர்கள் கட்டா பிரிவில் சூரியகுமார் முதலிடமும், சாய்ராம் இரண்டாம் இடமும், ராகுல், பாலாஜி, அக் ஷயா, அரசன் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா மற்றும் பள்ளி முதல்வர் சந்தோஷமால் சோர்டியா, கராத்தே பயிற்சியாளர் கிருஷ்ணன் பாராட்டினர்.