ADDED : டிச 17, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் ஓவியம் மற்றும் கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்றனர்.
சேலத்தில் மதர் தெரசா கல்வி மையம் சார்பில் ஓவியம் மற்றும் கையெழுத்து போட்டி நடந்தது.
கையெழுத்து போட்டி யில் கடலுார் லட்சுமி சோர டியா பள்ளி மாணவர்கள் பூஜித்தா, ரூபஸ்ரீ, ஸாராஸ்ரீ, சுதர்சன் மற்றும் ஓவிய போட்டியில் காருண்யா, சுதர்சன், மைக்ளின் ஜெசிகா, சுதாகரன், லாவண்யா, மாதேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இம்மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா பரிசு வழங்கி பாராட்டினார்.பள்ளி ஒருங்கிணைப்பா ளர் சித்ரா, ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.