ADDED : செப் 15, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம், செப். 16–
மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் 33 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது.
அதனையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு சந்தன அலங்காரம் செய்து 1,008 அர்ச்னை நடந்தது. தொடர்ந்து உலக நன்மை வேண்டி நேற்று இரவு 7;00 மணியளவில் திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
