sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சுற்றறிக்கை நகலை எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

/

 சுற்றறிக்கை நகலை எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 சுற்றறிக்கை நகலை எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 சுற்றறிக்கை நகலை எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 16, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உயர்நீதிமன்ற சுற்றறிக்கை நகல் எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவுறுத்தலில்படி, கீழமை நீதிமன்றங்களில் இ -பைலிங் முறையை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய இ-பைலிங் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

அதன்படி, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் உயர்நீதிமன்ற சுற்றறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. வழக்கறிஞர் புஷ்பதேவன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் அம்பேத்கர், பூமாலை குமாரசாமி, பட்டி முருகன், சங்கரய்யா உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை நகலை வழக்கறிஞர்கள் எரித்தனர். இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் தலைமையிலான போலீசார், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தால், நீதிமன்ற வளாகம் முன் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us