ADDED : செப் 09, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
கடலுார், செப். 11–
கடலுார் கோர்ட் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பார் அசோசியேஷன் தலைவர் பார்த்தசாரதி, லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராமஜோதிவேல், சிதம்பரம் பார் அசோசியேஷன் தலைவர் (பொறுப்பு) வைத்தியலிங்கம் தலைமை தாங்கினர். பார் அசோசியேஷன் செயலாளர் லெனின், லாயர்ஸ் அசோசியேஷன் செயலாளர் அறவாழி, சிதம்பரம் பார் அசோசியேஷன் பொருளாளர் பாலகுரு முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் திருமார்பன், செந்தில்குமார் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நாகராஜ், சரண்ராஜ், அருள்நாதன், ஷபீனா, வத்சலா உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலுார் நுகர்வோர் கோர்ட்டை திருவண்ணாமலைக்கு மாற்றும் முடிவை கைவிட ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
