/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெங்கைகொண்டானில் எல்.இ.டி., விளக்கு பொருத்தம்
/
கெங்கைகொண்டானில் எல்.இ.டி., விளக்கு பொருத்தம்
ADDED : ஜன 10, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் மாநில நகர்புற திட்டத்தின் கீழ் 14.29 லட்சம் மதிப்பில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி நடந்தது.
கெங்கைகொண்டான் பேரூராட்சி எம்.ஜி.ஆர்., நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். செயல் அலுவலர் சண்முகசுந்தரி முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணை சேர்மன் பெலிக்ஸ், இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் மாலா சதீஷ்குமார், சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

