/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவமனையில் நுாலக வார விழா
/
அரசு மருத்துவமனையில் நுாலக வார விழா
ADDED : நவ 17, 2025 01:58 AM

கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனையின், கிளை நுாலகத்தில் நுாலக வாசகர் வட்டம் சார்பில், நுாலக வார விழாவை முன்னிட்டு நேரு படத்திறப்பு, வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். பாஸ்கர் வரவேற்றார். கலைச்செல்வி, ஒருங்கிணைப்பு செயலாளர் சுந்தர வடிவேல் முன்னிலை வகித்தனர். முன்னாள் பிரதமர் நேரு படத்தை, ஓய்வு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி திறந்து வைத்தார்.
திருக்குறள் திருப்பணித்திட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் நடராஜன், நுாலக வாசகர் வட்ட கவுரவ தலைவர் இளங்கோவன், சத்யராஜ் மோகன், ஆறுமுகம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெகரட்சகன், அலுவலக கண்காணிப்பாளர் வீரவேல், ஞானசேகரன், சுப்ரமணியன் வாழ்த்தி பேசினர்.
பார்த்திபன் நன்றி கூறினார்.

