/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு
/
மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு
ADDED : டிச 20, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகர் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் இறந்தார்.
கடலுார் புதுவண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் மணிபாலன்,32. லாரி டிரைவர். நேற்று காலை 11மணிக்கு தனது லாரியில் கிராவல் ஏற்றிக்கொண்டு மணக்குப்பம் சுடுகாடு வழியாக சென்றார். அங்கு லாரியை ரிவர்ஸ் எடுக்கும்போது, இடதுபுற கண்ணாடியில் தாழ்வாக சென்ற மின்ஒயர் சிக்கியது. அதை எடுக்கும்போது மின்சாரம் தாக்கி மயங்கிவிழுந்தார். கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.