ADDED : அக் 21, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் உழவர் சந்தை அருகே, திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, கடலுார் முதுநகரை சேர்ந்த ஜவகர், 65; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.
இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து ஜவகரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.