ADDED : ஜன 12, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் சப் இன்ஸ் பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார், கோ.பொன்னேரி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர், கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் வனத்தையன் மகன் அந்தோணி டேவிட், 39, என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பது தெரிந்தது.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, அந்தோணி டேவிட்டை கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.