ADDED : ஆக 21, 2025 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் லாட்டரி விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வானொலி திடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன், 64; என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து மோகனை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.