/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாட்டரி வியாபாரி தடுப்பு காவலில் கைது
/
லாட்டரி வியாபாரி தடுப்பு காவலில் கைது
ADDED : டிச 25, 2024 08:39 AM

கடலுார் : சிதம்பரத்தை சேர்ந்த லாட்டரி வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம், காரைக்காட்டு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ஷம்மு என்கிற நசீர், 56, என்பவர், இவர், சிதம்பரத்தில் வியாபாரி ஜோதி என்பவரிடம் லாட்டரி சீட்டு வாங்கிக்கொள்ள கட்டாயப்படுத்தினார். அவர் மறுக்கவே, நசீர் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து 200 ரூபாயை பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரில், சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து நசீரை கைது செய்தனர். இவர் மீது டவுன் போலீஸ் நிலையத்தில் 5 லாட்டரி வழக்குகள் உள்ளன. இவரது தொடர் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி.,ராஜாராமின் பரிந்துரையையேற்று, தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதற்கான உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் நசீரிடம் போலீசார் வழங்கினார்.

