ADDED : அக் 14, 2024 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் காதல் தோல்வி காரணமாக திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் மஞ்சக்குப்பம், பெரப்பன்குட்டையை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சுபஸ்ரீ, 23, திருநங்கை. இவர் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த மற்றொரு திருநங்கையை காதலித்ததாக தெரிகிறது. காதலை ஏற்றுக் கொள்ளாததால் மனமுடைந்த சுபஸ்ரீ, கோண்டூரில் வாடகை வீட்டில் சேலையால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.