ADDED : மே 22, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி:மூதாட்டியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி, குப்பம்மாள், 65; இவரது மருமகள் ஜோதியிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜா தகராறில் ஈடுபட்டார். இதனை குப்பம்மாள் தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த ராஜா, குப்பம்மாளை தடியால் அடித்து, கொலை மிரட்டல் விடுதார். இதில் படுகாயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து, விசாரிக்கின்றனர்.