ADDED : ஜூலை 29, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே நிலத்தகராறில், மூதாட் டியை தாக்கியவரை போலீ சார் கைது செய்தனர்.
விருத்தாசலம், ஆலடி அடுத்த கொக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி சந்தனபாக்கியம், 80; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 43, என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த முருகன், சந்தனபாக்கியத்தை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர்.