ADDED : ஜன 18, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே கழிவுநீர் வழிந்தோடிய தகராறில் பெண்களை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் அருள் மனைவி புவனேஸ்வரி,38; நேற்று முன்தினம், இவரது பக்கத்துவீட்டில் வசிக்கும், சுந்தரி வீட்டிலிருந்து கழிவுநீர் புவனேஸ்வரி வீட்டுவாசலுக்கு வந்தது. இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சுந்தரியின் மருமகன்
வேல்முருகன்,43; மாமியாருக்கு ஆதரவாக புவனேஸ்வரி மற்றும் அவரது மகள் வர்ஷினியாவை திட்டி தாக்கினார். இதில் காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து, வேல்முருகனை கைதுசெய்தனர்.