sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி., சுரங்கத்தில் தள்ளி பெண்ணை கொன்றவர் கைது

/

என்.எல்.சி., சுரங்கத்தில் தள்ளி பெண்ணை கொன்றவர் கைது

என்.எல்.சி., சுரங்கத்தில் தள்ளி பெண்ணை கொன்றவர் கைது

என்.எல்.சி., சுரங்கத்தில் தள்ளி பெண்ணை கொன்றவர் கைது


ADDED : ஏப் 10, 2025 02:24 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்:பெண்ணை தாக்கி என்.எல்.சி., சுரங்கத்தில் தள்ளி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், வேப்பங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி, 33, திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் பாஸ்கரன் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.

கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரபாவதியை, பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், மந்தாரக்குப்பம் போலீசில் அவரது தாய் தனலட்சுமி நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

மந்தாரக்குப்பம் போலீசார், சந்தேகத்தில், ஆறுமுகம்நகரை சேர்ந்த சம்பத், 33, என்பவரை விசாரித்தனர். பள்ளி தோழர்களான பிரபாவதியும், சம்பத்தும் சில மாதங்களாக நெருங்கி பழகி வந்த நிலையில், கடந்த 7ம் தேதி இரவு, இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, குடிபோதையில் இருந்த சம்பத், பிரபாவதியை கடுமையாக தாக்கியதில், அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார். அந்த பெண்ணை, என்.எல்.சி., சுரங்கத்தில் 100 அடி பள்ளத்தில் தள்ளி விட்டு சென்றார். நேற்று காலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, பிரபாவதி பலத்த காயங்களுடன் என்.எல்.சி., சுரங்கத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மந்தாரக்குப்பம் போலீசார் சம்பத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us